தஞ்சாவூர்:17-தஞ்சை மாவட்டத்தில் பருவமழை காரணமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது இதனை மண்டல இணை இயக்குனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது பருவமழை காலங்களில் நோய்த் தாக்குதலில் இருந்து கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 80 ஆயிரம் கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது இந்த பணிக்காக அறுபத்தி மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கால்நடை உதவி மருத்துவர்கள் 63 கால்நடை ஆய்வாளர்கள் 63 கால்நடை உதவியாளர் என மொத்தம் 189 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தற்போது பருவமழை பெய்து வருவதால் வீடு வீடாக சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது அதன்படி தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நாஞ்சிகோட்டை, விளார், நா. வல்லுண்டன்பட்டு, கொ.வல்வண்டாம்பட்டு, கொல்லாங்கரை, மருங்குளம், ஆகிய ஊராட்சிகளில் கால்நடைகள் உள்ளன வீடுகளுக்குச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது கால்நடை உதவி மருத்துவர் செரிப் மற்றும் குழுவினர் இந்த தடுப்பூசியினை போட்டு வருகிறார்கள்.

இதனை தந்தை வந்தவர் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மருத்துவர் தமிழ்ச்செல்வன் உதவி இயக்குநர் செய்யது அலி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்,மேலும் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கோமாரி நோய்த் தடுப்பு ஊசியை கால்நடைகளுக்கு போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/