தஞ்சாவூர் நவ:2- தஞ்சாவூர் புதுக்கோட்டை சாலை புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சாலையோரம் சுமார் 100 ஆண்டு கால பழமைவாய்ந்த ஆலமரம் இருந்து வந்தது இந்த ஆலமரம் அந்தப் பகுதிக்கு அடையாளமாக இருந்ததால் பொதுமக்கள் ஆல மர பஸ் நிறுத்தம் என்றே அழைத்து வந்தனர்.

படர்ந்து விரிந்து விழுதுகள் இறங்கி காணப்பட்ட இந்த ஆலமரம் அந்தப்பகுதியில் நிழல் தரக்கூடிய நிழல் குடையாகவும் திகழ்ந்து வந்தது கோடைகாலத்தில் வெயிலுக்கு இதமாக மக்களுக்கு நிழல் தந்து காத்து வந்தது இந்த நிலையில் சாலை விரிவாக்கம் காரணமாக சாலையோரம் இருந்த ஆல மரத்தின் கிளைகள் விழுதுகள் அகற்றப்பட்டன.

இப்படி ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு வந்ததால் மரத்தின் ஒருபுறத்தில் கிளைகளும் விழுதுகளும் பெரும்பாலும் இன்று இருந்து வந்தது மறுபுறத்தில் கிளைகள் வேர்கள் மட்டுமே அதிக அளவில் இருந்து வந்தது. இந்த மரத்தின் அடியில்தான் பஸ்ஸிற்காக மக்கள் காத்து நிற்பார்கள் மேலும் மரகதவல்லி டீக்கடை ஒன்றும் செயல்பட்டு வந்தது மாலை நேரத்தில் பால் வியாபாரம் தள்ளுவண்டியில் வைத்து கடலை வியாபாரம் நடைபெற்று வந்தது.

தஞ்சை மாநகரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அதிகாலை முதல் இடைவிடாத மழையால் பெய்து கொண்டிருந்தது தொடர் மழையின் காரணமாக ஆலமரம் நேற்று மாலை வேரோடு சாய்ந்து இந்த பிரதான சாலையின் குறுக்கே விழாமல் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே விழுந்தது மரம் சாய்ந்த நேரத்தில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார் அவர் மரம் சாய்ந்து விழுவது பார்த்த உடன் கூட்டணி அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டார்.

மேலும் பால் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வாழ்க்கையுடன் மோட்டார் சைக்கிளும் தள்ளுவண்டியில் கிளைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது மரத்தடியில் இருந்த டீக்கடை முழுமையாக சேதம் அடைந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் டீக்கடைக்கு விடுமுறை விடப்பட்டதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டது.

ஆலமரம் பிரதான சாலையில் விழாமல் மறுபுறம் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது மேலும் மரக்கிளைகளை மின் கம்பிகள் மீது விழுந்ததால் கம்பிகள் அறுந்து விழுந்தன இதனால் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது மேலும் சில வீடுகளுக்கு சென்ற மின் வயர்கள் அது வந்து விழுந்தது இதனால் மின்சார விநியோகம் தடைபட்டது.

இந்த தகவலை அறிந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆர் .ஆர். நகர் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அருவா மற்றும் மரம் அறுக்கும் வாள் எடுத்து வந்து கிளைகளை வெட்டி உள்ளே சிக்கி இருந்த ஸ்கூட்டர்கள் மோட்டார் சைக்கிளையும் வெளியே எடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் டீ கடைக்குள் இருந்த சிலிண்டரை வெளியே கொண்டு வந்தனர் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கும், பறவைகளுக்கும், நிழல் குடையாகவும் இருப்பிடமாகவும் இந்த ஆலமரம் வேரோடு சாய்ந்தது அப்பகுதியின் அடையாளமாக திறந்த ஆலமரம் சாய்ந்ததால் மக்கள் வேதனை உற்றனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/