தஞ்சை ஜனவரி 13 புகையில்லா போகி பண்டிகையை கொண்டாடுவோம் என மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார், அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருள்களான பிளாஸ்டிக் செயற்கை இலைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள் ரப்பர் பொருட்கள் பழைய டயர் மற்றும் காகிதம் ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஏற்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துக்களும் காரணமாக உள்ளது மேலும் மாணவர்கள் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் ஏற்படுகிறது எனவே போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரித்தல் தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாப்பு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ம.சசிகுமார், நிருபர்.
தஞ்சை.