தஞ்சாவூர் ஜன 27 மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் பேரணி நடைபெற்றது அந்த வகையில் தஞ்சையில் பேரணியாக செல்ல ஏராளமான டிராக்டர்கள் மோட்டார் சைக்கிளில் மாட்டு வண்டிகளில் விவசாயிகள் தஞ்சாவூர் மேலவஸ்தச்சாவடி வந்தனர், ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர் அப்போது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதையடுத்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் ஐந்து டிராக்டர்களுடன் மட்டுமே பேரணி செல்ல வேண்டும் குறிப்பிட்ட அளவில் மோட்டார் சைக்கிள் மாட்டு வண்டிகளில் பேரணிச் செல்லலாம் என போலீசார் கூறினர்.
இதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் 5 டிராக்டர்களுடன் தேசியக் கொடியோடு பேரணியாக புறப்பட்டனர், டிராக்டர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டிகள் சென்றன ஏராளமான விவசாயிகளும் பெண்களும் நடந்து பேரணியாக கலந்து கொண்டனர். இந்த பேரணியை தஞ்சை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
விவசாயிகள் டிராக்டர் ஊர்வலத்திற்கு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்ணன், சாமி.நடராஜன் தலைமை தாங்கினார்கள், திமுக எம்எல்ஏக்கள் |துரை சந்திரசேகரன் M.ராமச்சந்திரன், T.K.G. நீலமேகம் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் பி.ஜி. ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் பாரதி, முத்து உத்திராபதி, மார்க் மார்க்ஸஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் தொடங்கி சில அடி தூரத்தில் மேம்பாலத்தில் வந்த போது ஊர்வலத்தில் வந்த இருசக்கர வாகனங்களை போலீசார் மதித்தனர் ஏராளமான போலீசார் தடுப்பு மற்றும் கயிறுகளைக் கொண்டு மரித்தனர் ஆனால் போலீசாரின் தடையை மீறி போராட்டக்காரர்கள் ஊர்வலத்தை தொடர்ந்தனர் இதனால் இரு தரப்புக்கும் இடையே சிறிது தூரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதனால் அங்கு பதற்றம் நிலவியது 30 நிமிடத்திற்கு மேலாக இந்த போராட்டம் நீடித்தது.
பின்னர் போர் குழுவினர் போலீசாரின் தடையை மீறி முன்னேறிச் சென்றனர் மீண்டும் போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதித்தனர் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஊர்வலம் வந்ததும் மீண்டும் போலீசார் தங்களுடைய நான்கு சக்கர வாகனங்களை கொண்டுவந்து சாலையின் குறுக்கே நிறுத்தி ஊர்வலத்தை மரித்தனர் அப்போது போலீசாரின் வாகனங்களை போராட்டக்காரர்கள் தள்ளி விட முயன்றனர் இதனால் போலீசார் தங்களது வாகனங்களில் உடனடியாக அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து ஊர்வலம் புதிய பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்தது இந்தப் போராட்டத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி, திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர் மாநில அமைப்புச் செயலாளர் ஒரத்தநாடு குணசேகரன், ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரை மாணிக்கம், மாநில துணைத்தலைவர் முகமது அலி முகமது அலி மற்றும் போராட்டக் குழு நிர்வாகிகள் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தையொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சீத்தாராமன் பாரதிராஜா சுபாஷ் சந்திரபோஸ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர் இதேபோல் திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களிலும் போலீசாரின் தடையை மீறி ஊர்வலம் நடந்தது அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
செய்தி க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை.