தஞ்சை மார்ச் 04 தஞ்சை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஸ்கூல் பேக் பறிமுதல் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது தஞ்சை மாவட்டத்தில் 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூரில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒன்ற சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் ஒரு பிரகாசம் இசை பழனிராஜன் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர் சோதனை செய்த போது கண்டெய்னர் லாரியில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படக் கூடிய ஸ்கூல் பேக் சுமார் 50,000 இருப்பது கண்டறியப்பட்டது.
இது குறித்து கல்விதுறை அலுவலர்கள் வந்து விளக்கமளித்தனர் அதில் ஹரியானா மாநிலத்திலிருந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்க இந்த ஸ்கூல் பேக் வரவழைக்கப்பட்டு கும்பகோணத்திற்கு கொண்டு சென்று குடோனில் வைக்கப்படும் என்று தெரிவித்தனர் இந்த பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடப்பாடி பழனிச்சாமி உருவ படங்கள் அச்சிடப்பட்டிருந்தன இதனால் உடனடியாக அவற்றை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை