தஞ்சாவூர் அக் 11-தஞ்சாவூர் மன்னார்குடியில் 2020 21 காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நன்றி
பிஆர் பாண்டியன்..
தஞ்சை அக் 11: தமிழ்நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் தனது பயிருக்கு காப்பீடு செய்திருந்தனர். கடந்த ஜனவரி மாதம் பருவம் மாறி பெய்த பேரழிவு பெருமழையால் காவிரி டெல்டாவில் அறுவடைக்கு தயாராக இருந்த ஒட்டுமொத்த விளைநிலங்களும் அழிந்து போனது.
ஈரோடு மாவட்டத்தில் அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் இன்னாள் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அவர்கள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு அவசர அவசரமாக கடலூர் நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தமிழக அரசு விரைந்து நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதனை ஏற்றுக்கொண்ட அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேரிடர் மேலாண்மை திட்டத்தின் மூலமாக இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வறிக்கை முடிந்து மூன்று மாத காலத்திற்குள்ளாக (ஜூன்) இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என விதி உள்ளது.ஆனால் காப்பீட்டு நிறுவனம் மத்திய மாநில அரசுகளை காரணம் காட்டி விட்டு இழப்பீடு வழங்க காலதாமதம் படுத்தியது.
இதனை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இழப்பீட்டு தொகை கேட்டு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்திற்கு அறிவிப்பு.
இதனை அடுத்து தமிழக அரசு வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழக அரசு உடனடியாக இறப்பீட்டுற்கான தமிழக அரசின் பங்குத் தொகை விடுவிக்கப்பட்டுளதாகவும் விரைவில் மத்திய அரசிடம் அணுகி இழப்பீடு பெற்று 15 தினங்களுக்குள் விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று அறிவித்தார். அதற்கு மதிப்பளித்து அறிவிக்கப்பட்ட போராட்டத்தை ஒத்திவைக்கப்பட்டது.
தொடர்ந்து செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரையிலும் வழங்க காலதாமதம் ஆனதால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து செப்டம்பர் 30ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் தமிழக காவிரி விவசாயிகள் சார்பில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த மத்திய அரசு உடனடியாக தனது பங்குத் தொகையை வழங்கிய நிலையில் தற்போது காப்பீடு நிறுவனம் மூலமாக இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளதாகவும்,10 தினங்களுக்குள்ளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாராட்டுக்குரியது, உடனடியாக நிதியை ஒதுக்கீடு செய்த மத்திய மாநில அரசுகளுக்கு விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். என்றார் மேற்கண்டவாறு தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/