தஞ்சை மே 25 தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் மதியம் 12 மணி வரை அரசு ஒழுங்கு முறை (ரேஷன்) கடைகள் இயங்கும்.
தஞ்சை ரேஷன் கடைகள் இயங்கும்… தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கின் போதும் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வரும் 31ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு தளர்வுகள் வழங்கப்படுவது போல் ரேஷன் கடைகளும் இயங்க அனுமதி அளிக்குமாறு பல தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், முழு ஊரடங்கின் போது காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்