பட்டுக்கோட்டை மே 11: முழு ஊரடங்கு விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்று சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தெரிவித்து உள்ளார்.

பட்டுக்கோட்டையில் கொரோனா முன்னெச்சரிக்கை, முழு ஊரடங்கு விதிகள் அமல் தொடா்பாக சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, காவல்துறையினருடனான கலந்தாய்வுக் கூட்டம் சாா் ஆட்சியரகத்தில் நடந்தது.

இதில் சாா் ஆட்சியா் பாலச்சந்தா் தலைமை வகித்து பேசியதாவது:

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள போதிய இடம் இல்லாதவா்களை மட்டும் கொரோனா தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். பொது முடக்க விதிகளை மீறி செயல்படும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும். மொய் விருந்து விழாக்களை கண்டிப்பாக நடத்த அனுமதிக்கக் கூடாது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது பொதுமக்களிடமிருந்து சரியான முகவரி, தொலைபேசி எண் வாங்க வேண்டும்.

தனியாா் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் நோய்த்தொற்று எவருக்கேனும் உறுதி செய்யப்பட்டால் அந்த விவரங்களை அன்றைய தினம் நகராட்சி மற்றும் மருத்துவ அலுவலா்களிடம் வழங்க வேண்டும். முழு ஊரடங்கு காலத்தில் அனைவரும் விதிகளை முறையாக கடைப்பிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளா் புகழேந்தி கணேஷ், நகராட்சி ஆணையா் சென்னு கிருஷ்ணன், வருவாய்த் துறை அதிகாரிகள், பட்டுக்கோட்டை நகராட்சி துப்புரவு அலுவலா், துப்புரவு ஆய்வாளா்கள், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதியைச் சோ்ந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.