தஞ்சை, ஜன.24- தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் வரும் 25-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர் துணை மின் நிலையத்தில் வரும் 25-ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன் ரோடு, தென்றல் நகர், கிரி ரோடு, காமராஜர் ரோடு, ஆபிரகாம் பண்டிதர் நகர், மேல வீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம், ரயிலடி, சாந்தப்பிள்ளை கேட், மகர்நோன்பு சாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியர் சதுக்கம், விபி கோவில், சேவியர் நகர் பகுதிகளில்
மற்றும் சோழன் நகர், ஜிஏகேனல் ரோடு, திவான் நகர், சின்னையா பாளையம், மிஷன் சர்ஸ் ரோடு, ஜோதி நகர், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், பர்மா பஜார், ஜூபிடர் தியேட்டர் ரோடு, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்என்எம் ரஹ்மான் நகர், அரிசிகடை தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு, பழைய மாரியம்மன் கோவில் ரோடு, ராவுத்தா பாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜபாளையம், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஏபி சுவிட்ச் வரை காலை 10 மணி முதல் மதியம் 3 மணிவரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/