தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாட்டில் விடுதலைச்சிறுத்தைகளின் கட்சி கொடி கம்பத்தை அகற்றிய மா்மநபா்களை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாப்பாநாட்டில் அண்ணா சிலை அருகே இருந்த விடுதலைசிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை மா்ம நபா்கள் அகற்றி உள்ளனர். இதை அறிந்த கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளா் (பொ) தங்க முருகானந்தம், ஒரத்தநாடு தொகுதி செயலாளா் வழக்குரைஞா் அரசமுதல்வன் உள்ளிட்ட கட்சியினா் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில் மாற்று கொடிக்கம்பத்தை நட்டு, கொடியேற்றி, கொடிக்கம்பத்தை அகற்றிய மா்மநபா்களை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கொடிக்கம்பம் அகற்றம் தொடா்பாக கட்சியின் ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளா் சிவா அளித்த புகாரின்பேரில் பாப்பாநாடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்,
http://thanjai.today/