தஞ்சாவூர் பிப்.8- தஞ்சை மாவட்ட திராவிட மாணவர் கழகம் நடத்திய அறிவுசார் கூட்டம் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பெரியார் தொடர் கல்வி கல்லூரி வளாகம் மேல்தளத்தில் அறிவுசார் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இனிவரும் உலகம்*தலைப்பில் மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் வழக்கறிஞர் சே.மெ. மதிவதனி எழுச்சியுடன் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். நிகழ்வில் மாநில, மாவட்ட,நகர, ஒன்றிய திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக, இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் தஞ்சை நகரத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/