தஞ்சாவூர் செப் 8 டெல்லியில் கடந்த வாரம் ராபியா என்கிற பெண் காவலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் தஞ்சை ரயில் நிலையம் அருகில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் கலந்துகொண்டு கண்டன உரையாற்றி பேசுகையில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக உலக அளவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஒன்றிய அரசு பெண்களுக்கான பாதுகாப்பை முன்னெடுக்க தவறிவிட்டது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவம் உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது, காவல்துறையில் பணியாற்றிய பெண் காவலருக்கு ஏற்பட்ட இந்த கொடுமையான சம்பவம் மற்ற அரசு ஊழியர்களாக இருக்கும் பெண்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் பாதுகாப்புத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற போதும் இந்த குற்றவாளிகள் இதுவரை கைது செய்து தண்டிக்கப்படாமல் இருப்பது மத்திய அரசு பெண்களுக்கு பாதுகாப்பதில் தவறிவிட்டது என குற்றம்சாட்டினார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஹாஜாஜியாவுதீன் மாவட்ட துணை தலைவர் அப்துல்லாஹ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/