தஞ்சாவூர்,நவ:24- தஞ்சாவூர் அண்ணா சாலை பழங்கள் கட்டிடம் செல்லக்கூடிய சாலையோரத்தில் செல்போன் கடைகள் துணிக்கடைகள் தேனீர் கடைகள் காலணி கடைகள் என 54 கடைகள் உள்ளன மழைநீர் வடிகால் மீது ஆக்கிரமிப்பு கடைகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த கடைகளை அப்புறப்படுத்தி மழைநீர் வடிகால் கட்டிட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
எனவே கடை காலி செய்யுமாறு வியாபாரிகளிடம் மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், தற்போது கடைகள் இருக்கும் இடத்துக்கு பின்பகுதியில் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனிடையே கடந்த 8ஆம் தேதி கடைகளை காலி செய்ய மாநகராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் அலுவலர்கள் சென்றனர். அப்போது அங்கிருந்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் இடிக்கப்படவில்லை. தொடர்ந்து இக் கடைகளுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்காக மாநகராட்சி அலுவலர்கள் கடந்த 16-ம் தேதி சென்ற போது அவர்களை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு ஊழியர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்ள இந்த தளம் மாநகராட்சி அலுவலர் திரும்பிவிட்டனர். இந்த நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையிலும், காவல்துறையினரின் பாதுகாப்புடன் 54 கடைக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இரண்டு கடைகள் அப்புறப்படுத்தப் பணிகள் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்தனர், இருந்த கடைகளை காலி செய்வதற்காக இரு நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. என்றும் கடைகளில் உள்ள பொருட்களை வியாபாரிகள் அகற்றிய பிறகு வரும் 26-ஆம் தேதி கடைகளை அகற்றும் பணி தொடங்கப்படும் எனவும் மாநகராட்சி அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/