தஞ்சாவூர் நவ :23- தஞ்சையில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட 553 மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவுறுத்தி உள்ளார் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டை பட்டா மாற்றம் கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 553 மனுக்கள் பெறப்பட்டன பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நியூஸ் பொன்ராஜ் ஆலிவர் வருவாய்த் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 4 பயனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு உதவி தொகைக்கான ஆணையை வழங்கி கூட்டத்தில் (வருவாய்) கூடுதல் ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், (தனி துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம்) சாலை தவவளவன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/
