தஞ்சாவூர் டிச 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் புரவி புயலால் பகுதிகளில் 8 பேர் கொண்ட மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் அவர்களிடம் பாதிப்பை விவசாயிகள் கூறினர், புரெவி புயல் மழை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கும் மேல் தொடரும் மழை பெய்தது இது தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகின மண்ணில் முளைத்து கனவுக்கான பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்து தவிர சோளம் நிலக்கடலை போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன.
மேலும் மழையின் காரணமாக ஆறுகளில் அடைப்புகள் ஏற்பட்டு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர் தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரிய கோட்டை மற்றும் ஒரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவின் தலைவர் அக்னிகோத்ரி தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த குழுவில் மத்திய வேளாண் துறை அமைச்சக இயக்குனர் மனோகரன் அதிகாரிகள் பால்பாண்டியன், சுபம் கார்க் ஹர், ரணன்ஜாய் சிங், அமித்குமார், மோடி ராம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் இந்த குழுவினர் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி கலெக்டர் கோவிந்தராவ் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டனர்.
மதுக்கூர் ஒன்றியம் பெரிய கோட்டை ஒரத்தநாடு ஒன்றியம் மேல உளூர்,ஆகிய ஊர்களில் ஆய்வு மேற்கொண்டனர் பயிர் சேத விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர் அவர்களிடம் கலெக்டர் கோவிந்தராவ் சேத விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்,தஞ்சை மாவட்டத்தில் விரைவில் புயல் காரணமாக சாகுபடி செய்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் 8550 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்தன, இதனால் 859 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், 460 ஏக்கர் நிலக்கடலை பயிர் சேதம் அடைந்ததால் 62 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் 136 ஏக்கரில் மக்காச்சோளம் பெயர் சேதமடைந்த 144 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய குழுவிடம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பயிர் சேத விவரங்கள் குறித்து மத்திய குழுவினர் விவசாயிகளிடம் நேரடியாக கேட்டறிந்தனர் இதனைத் தொடர்ந்து விவசாயிகள் பாதிப்புக்குள்ளான ஏற்ப இறை மத்திய குழுவினரிடம் காட்டினர் அப்போது இரண்டு விவசாயிகள் இந்தியில் மத்திய குழுவினருக்கு எளிதில் புரியும் வகையில் எடுத்துரைத்தனர் அதனைக் கேட்டுக் கொண்ட மத்திய குழுவினர் விவசாயிகள் இந்தியில் பேசியதை பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
விவசாயிகள் கூறும்போது மழையின் காரணமாக கட்டிவிடும் பருவத்தில் இருந்த நெல் மணிகள் அனைத்தும் பதராகி போய்விட்டது வைக்கோல் மட்டுமே கிடைக்கும் நெல்மணிகள் எதுவும் கிடைக்காது ஏக்கருக்கு ரூபாய் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம் எனவே அரசு எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கினால் பேருதவியாக இருக்கும் என கூறினார் மத்திய குழுவினர் அதனைக் கேட்டு அவர்களிடம் எவ்வளவு மழை பெய்தது, நிலத்தடி நீர்மட்டம் எவ்வளவு உள்ளது என்பது போன்ற விவரங்களை கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டனர்.
ஆய்வின்போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர் வேளாண் கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன் உதவி கலெக்டர் பாலச்சந்தர் வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்