தஞ்சாவூர் செப் 14: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரியங்கொட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் கிளை வாய்க்கால் பாலம் இல்லாததால் சடலத்தை இறுதிச்சடங்கு செய்ய ஆற்றின் குறுக்கே தண்ணீரில் இறங்கி தூக்கிச் செல்லும் அவலத்திற்கு தமிழக முதல்வர் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி அருகே உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் சடலத்தை இவர்களுக்கு சொந்தமான சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதற்கு கல்லணை கால்வாய் வாய்க்காலில் குறுக்கே பாலம் இல்லாததால் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் சடலத்துடன் ஆற்றில் இறங்கி கொண்டு செல்லும் அவலத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் என்பவரின் மகன் மகாலிங்கம் என்பவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் இவரது சடலத்தை இதை எடுத்துச் சென்றபோது ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். கடந்த அண்ணா திமுக ஆட்சியில் பலமுறை மனு கொடுத்தும் பாலம் கட்டப் படவில்லை என தமிழக முதல்வர் மு . . ஸ்டாலின் உடனடியாக சிறப்பு கவனம் செலுத்தி பாலம் கட்டி தர வேண்டும் என ஆதிராவிடர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தி க.சசிகுமார் நிருபர். https://thanjai.today/