தஞ்சாவூர் செப்:1- தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஸ் (32) ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி எழிலரசி ( 32) அதே வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களின் 22 மாத பெண் குழந்தை பாரதி தானாக எழுந்து நிற்கமுடியாமல் முதுகு தண்டு வட தசை நார் சிதைவு நோய் இருப்பது கடந்த ஆகஸ்டு 9 ஆம் தேதி கண்டறியப்பட்டது. சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் ரூபாய் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊசிமருந்து செலுத்தினால் மட்டுமே நோயை குணப்படுத்த முடியும் என கூறியுள்ளனர்.
ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நாமக்கல் சிறுமி மித்ரா சிகிச்சை பெற்ற பெங்களூர் மருத்துவமனையில் 4 நாட்களாக பாரதிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது சிறுமியின் சிகிச்சைக்கா தேவையான நிதியை பல்வேறு தரப்பினரும் திரட்டி அதற்காக துவங்கப்பட்ட வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் விளார் சாலை அண்ணா நகரில் சிறுமி பாரதியின் சிகிச்சைக்காக கடந்த 29ஆம் தேதி பொதுமக்களிடம் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தனது முதல் நிதியை வழங்கி துவக்கிவைத்தார்.
தொடர்ந்து ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்கள் தங்களின் ஒரு நாள் ஊதியம் ஆன ரூபாய் 35 ஆயிரமும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆப்பரேட்டர்கள் வார்டு உறுப்பினர்கள் தன்னார்வலர்கள் பொதுமக்கள் என பலரும் நிதி உதவி அளித்தனர்.
இதில் ரூபாய் 5 லட்சம் நிதி கிடைத்தது நிகழ்வில் குழந்தை பாரதியின் தாய் எழிலரசி பேசுகையில் பலரும் எங்கள் குழந்தையின் உடல் நல சிகிச்சைக்காக போராடிவருகிறார்கள், அவர்களுக்கு மிக்க நன்றி, எனது மகளுக்கு வந்துள்ள நோய் பத்தாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு வரும் நோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் மருத்துவமனையில் மரபணு சோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும், அப்படி செய்தால் இது போன்ற நோய் ஆரம்பத்திலேயே தெரிந்தால் நான்கைந்து லட்ச ரூபாய் செலவில் குணப்படுத்திவிடலாம்.
ஏற்கனவே மித்ரா என்ற குழந்தைக்கு குமாரபாளையத்தில் உள்ள வங்கி மூலம் கணக்கு தொடங்கி அதன் மூலம் நிதி திரட்டினர் அந்த அடிப்படையில் தான் நாங்களும் அதே வங்கியை அணுகி நிதியை திரட்ட கணக்கு தொடங்கியுள்ளோம் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ரூபாய் 16 கோடி தேவை என்கிற நிலையில் தற்போது ரூபாய் 1.75 கோடி தான் கிடைத்துள்ளது அரசும் அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் பொதுமக்களும் கருணை காட்டுங்கள் என கண்ணீர் மல்க கூறினார்கள்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/